மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் அவசர கூட்டம் இன்று மாவட்ட வெயலகத்தில் மவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பண்டிகைகாலங்களில் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டம் என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டது.நத்தார் பண்டிகை அதனை தொடர்ந்து புத்தாண்டு அதன்பின் பொங்கள் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகை காலமாகையினால் மக்கள் கொரோனா தொற்றில் இருந்த பாதுகாப்புடன் செயல்படும்படி அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
தேவாலயங்களுக்கு நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 25 பேர்கள் மாத்திரம் கலந்து கொள்ளலாம் அங்கு வருகின்றவர்கள் கன்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படல் வேண்டும் அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேடகுழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது தவிர்க்கமுடியாததாகும்.
இம்முறை எழிமையானமுறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவதுதான் மூலம் கொரோனா தொற்றினை குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதாரத்துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கிவருகின்றனர்.