இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 490,110 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 415,649 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 11,431 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.அதேபோல், வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் 61,402 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.