ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள் தலிபான் தலைவர்களுடன் சந்திப்பு: அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். ஆட்சியமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 20 வருடத்திற்கு முந்தைய ஆட்சி போன்று இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைத்த ஆட்சியை ஏற்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளது.இதனால் முன்னாள் அதிபர் போன்ற முக்கியமான தலைவர்களை தலிபான்கள் அரசியல் அலுவலக தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் கர்சாய், தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சில் சேர்மன் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் தலிபான் அரசியல் தலைவர்கள் மவுலாவி ஷஹாபுதீன், தெலாவாரி தெலாவார், அப்துல் சலாம ஹானாஃபி, மவ்லாவி கைருல்லா கைருக்வா, அப்துல் ரஹ்மான் ஃபெடா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.அப்போது நாட்டின் எதிர்காலத்திற்காக தற்போதைய பாதுகாப்பு, அரசியல் முன்னேற்றம், உள்ளடக்கிய அரசியல் தீர்வு குறித்து பேசியதாக தெரிகிறது.அப்துல்லா அப்துல்லா அலுவலத்தில் இருந்து இந்த சந்திப்பு குறித்து விரிவான தகவல் வழங்கப்படவில்லை. தலிபான்களின் அரசியல் அலுவலக தலைவர்கள் ஏற்கனவே ஹஸ்-இ-இஸ்லாமி கட்சியை சேர்ந்த குல்புதீன் ஹெக்மாட்யரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *