இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்!

இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அவர் உறுதிப்படுத்தினார்.இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,340 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 334,939 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 298,162 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *