இலங்கையில் இன்று ஒரே நாளில்1,511 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று ஒரே நாளில்1,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 287,930 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 262,828 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மேலும், 3,870 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *