நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஜேக் டிராப்பர் ஆகியோர் மோதினர்.முதல் செட்டை டிராப்பர் 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 2,3 மற்றும் 4வது செட்களை வென்று அசத்தினார்.இறுதியில், 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *