அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இந்தியாவின் கோவாக்சின் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையின் பரிசோதனை முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் நடத்திய பரிசோதனையில் தடுப்பூசி 66 சதவீதம் செயல் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசி ஒரே டோசில் 66 சதவீதம் திறன் உள்ளதாகச் சோதனையில் தெரிய வந்துள்ளது. மற்ற கொரோனா தடுப்பூசிகள் இரு டோஸ்கள் தேவைப்படும் போது இந்த மருந்து ஒரே டோசில் 66 சதவீதம் நோய்த் தடுப்பு திறனை அளிக்கிறது. இந்த தடுப்பூசிக்கு ஏற்கனவே பிரிட்டன் அரசு 3 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் அளித்துள்ளது. இந்த மருந்து சோதனையில் எவ்வித பக்க விளைவுகளும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.