இயக்குனர் ஷங்கர் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார், அப்படத்தில் நடந்த விபத்திற்கு பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தெலுங்கு திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரேஷன்ஸ் தயாரிக்கும் அவர்களின் 50 படத்தில் இந்த பிரம்மாண்ட கூட்டணி இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, “இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Excited to be a part of Shankar Sir’s cinematic brilliance produced by Raju garu and Shirish garu.
Looking forward to #RC15 ! @shankarshanmugh @SVC_official #SVC50 pic.twitter.com/SpjOkqyAD4
— Ram Charan (@AlwaysRamCharan) February 12, 2021