இலங்கைக்கு இந்தியா வழங்கிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தது இதனை இலங்கை அதிபர் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலதீவு, நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.
அந்த வகையில், இலங்கைக்கு இந்தியா இலவசமாக 5 லட்சம் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது. மும்பையில் இருந்து இன்று விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து மதியம் கொழும்பு சென்றடைந்தது. அந்த மருந்துகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டார்
இலங்கைக்கு தடுப்பூசி மருந்து வழங்கி உதவி செய்த இந்திய மக்களுக்கும், பிரதமருக்கும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.