கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 261 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
அதன்படி,இந்தியாவிலிருந்து 29 பேர், கட்டாரிலிருந்து 30 பேர், ஜப்பானிலிருந்து 45 பேர் , அவுஸ்திரேலியாவிலிருந்து 157 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இது தவிர மேலும் 365 பேர் இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்.