விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலி-ஸ்வீடன் பிரதமர் இரங்கல்

சுவீடன் நாட்டின் ஓர்பெரோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.இதில் விமான ஓட்டி உள்பட 9 பேர் பயணம் செய்தனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று இந்த விமானம் தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் கூறி இருப்பதாவது ஓர்பெரோவில் விமான விபத்து நடந்தது பற்றிய துன்பகரமான தகவல் வந்தது. இது மிகவும் துக்ககரமான, வேதனையான செய்தி.இந்த தருணம் மிகவும் கடினமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அன்புக்குரியவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். இது போன்ற சோகம் இனி எப்போதும் ஏற்படக்கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.2019-ம் ஆண்டு இது போன்ற ஒரு விமான விபத்து சம்பவம் வடக்கு சுவீடனில் நடந்தது. தற்போது நடந்துள்ள விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *