விமானத்தில் தனி ஒருவனாய் பயணித்த மாதவன்

நடிகர் மாதவன், ‘அம்ரிகி பண்டிட்’ என்கிற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன், கடந்த மாதம் 26-ந் தேதி இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.

அந்த பயணம் அவருக்கு மறக்க முடியாத பயணமாக மாறி உள்ளது. ஏனெனில், அந்த விமானத்தில் சக பயணிகள் இன்றி அவர் மட்டுமே பயணித்துள்ளார்.இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மாதவன், “இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் சோகமாக இருந்தது. இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வேண்டுகிறேன். அப்போது தான் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *