வங்காளதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,614 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதனால் மொத்த பாதிப்பு 11,36,503 ஆக உள்ளது. 173 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,498 ஆக உயர்ந்து உள்ளது.இதனை முன்னிட்டு வங்காளதேசத்தில் ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவானது, இன்று (23ந்தேதி) காலை 8 மணி முதல் நடைமுறைக்கு வரும். இந்த முறை கடந்த ஊரடங்கை போன்று இல்லாமல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என அந்நாட்டு பொது நிர்வாக மந்திரி பர்ஹத் உசைன் தெரிவித்து உள்ளார்.