ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலி மேலும் பலர் படுகாயம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான  எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரெயில்கள் மோதியதில் 32 பேர் பலியானார்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் “32 பேர் பலியானார்கள் மற்றும் 66 பேர் காயமடைந்தனர்” என்று கூறினார். குறைந்தது 50 காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லபட்டு உள்ளனர் என கூறி உள்ளது.எகிப்து வட ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரெயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *