யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள்.
அவர்கள் வேறு எவரின் பெயரையும் என்னிடம் பிரேரிக்கவில்லை.
இதேவேளை, சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராகக் களமிறக்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினார்கள்.
அவர்களின் விருப்பம் என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மேயர் தெரிவு தொடர்பில் இரண்டு தடவைகள் நடைபெற்ற கூட்டங்களில் யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள் எவரும் சொலமன் சிறிலை விரும்பவில்லை.
அவரின் பெயரை உறுப்பினர்கள் எவரும் என்னிடம் பிரேரிக்கவில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் நேற்று ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமையிலிருந்து இந்த உண்மைத்தன்மையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
எனவே, சபை உறுப்பினர்களின் விருப்பத்துக்கமையவே ஆனோல்ட்டை பரிந்துரைத்தேன். நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. கட்சியின் கொள்கையை மீறி ஜனநாயக விரோத செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை
என சுமந்திரனுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதிலளித்துள்ளார்.