யாழ்ப்பாண பல்கலைகழகத்தினுள் இன்று நள்ளிரவு வேளை அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர.கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் யாழ் போலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை விடுவிப்பதற்கான முனைப்பில் தாம் ஈடுபட்டுள்ளதாக யாழ்-மாநகர மேயரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் எமது மக்களோடு ஒருவராக அவரும் அங்கு வந்து கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.