
இந்தியாவிலேயே தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க முதலில் இரண்டு வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஒருவாரம் முழு ஊரடங்கு (தளர்வுகள் இல்லாத) அமல்படுத்தப்பட்டது.இந்த நிலையில் முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நடமாடும் காய்கறி கடைகள், பழக்கடைகள் அதன்சார்ந்த துறைகள் மூலம் விற்கப்படும் நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளது.