இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையொன்றில் கிசிச்சை பெற்றுவந்த நிலையிலேயே முன்னாள் அமைச்சர் (65) உயிரிழந்துள்ளார்.மங்களசமரவீரவிற்கு கடந்த பல நாட்களாக தீவிரகிசிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுவந்ததாக தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் எனினும் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் காணப்பட்டது என தெரிவித்துள்ளன.இதனை தொடர்ந்து இன்று செயற்கை சுவாசம் வழங்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்நிலையில் மங்களசமரவீராவின் மறைவு குறித்து பிரதமர் மகிந்தராஜபக்ச தெரிவிக்கையில் எனது நண்பரும் சகாவுமான மங்களசமரவீரவின் மறைவு குறித்து அறிந்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.இந்த தேசத்தை நேசித்த ஒரு சிறந்த தலைவரை இன்று நாங்கள் இழந்துவிட்டோம்.இலங்கைக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.