மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.மியான்மரில் கடந்த 1 ஆம் திகதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டபோதே, ஓராண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

அந்த அவசரநிலையின்கீழ் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை. எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.அந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் அரசாணை திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவையும் மீறி, ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவா்கள் செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலேயில் போராட்டக்காா்களை கலைப்பதற்காக அவா்கள் மீது பொலிஸாா் தண்ணீரைப் பாய்ச்சியடித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை எச்சரிப்பதற்காக பொலிஸாா் இரண்டு முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், 25 க்கும் மேற்பட்டவா்களைக் கைது செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.தலைநகா் நேபிடாவிலும் போராட்டக்காரா்கள் மீது பொலிஸாா் தண்ணீரைப் பிய்ச்சி அடித்ததுடன் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். மேலும், அங்கு போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக அவா்கள் மீது ரப்பா் குண்டுகளால் சுட்டதாகவும் இதில் பலா் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தலைநகர் நேபிடாவில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதனைத் தொடர்ந்து ரப்பர் குண்டுகளால் சுட்டனர். அதன் பின்னரும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை எனவும், போராட்டக்காரர்களை எச்சரிக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் போலீசாரின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் நேற்றும் மியான்மர் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *