மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.மியான்மரில் கடந்த 1 ஆம் திகதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டபோதே, ஓராண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
அந்த அவசரநிலையின்கீழ் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை. எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.அந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் அரசாணை திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவையும் மீறி, ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவா்கள் செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலேயில் போராட்டக்காா்களை கலைப்பதற்காக அவா்கள் மீது பொலிஸாா் தண்ணீரைப் பாய்ச்சியடித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை எச்சரிப்பதற்காக பொலிஸாா் இரண்டு முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், 25 க்கும் மேற்பட்டவா்களைக் கைது செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.தலைநகா் நேபிடாவிலும் போராட்டக்காரா்கள் மீது பொலிஸாா் தண்ணீரைப் பிய்ச்சி அடித்ததுடன் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். மேலும், அங்கு போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக அவா்கள் மீது ரப்பா் குண்டுகளால் சுட்டதாகவும் இதில் பலா் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பொலிஸாா் உண்மையான குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி, அதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறுதிசெய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், பொலிஸாா் மீது போராட்டக்காரா்கள் பதில் தாக்குதல் நடத்தி, நிலைமை மேலும் மோசமாகும் பதற்றச் சூழல் ஏற்பட்டது.ஏற்கெனவே, ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த 1988 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அந்தப் போராட்டங்கள் ராணுவத்தால் முரட்டுத்தனமாக நசுக்கப்பட்டது. இதில் 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், ராணுவ ஆட்சியை எதிா்த்து தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களிலும் பொலிஸாா் ரப்பா் குண்டுகளைப் பயன்படுத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.