மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சசிகலா-காரில் அ.தி.மு.க. கொடி

காலஞ் சென்ற தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று பெங்களூரூ ஜெயிலில் இருந்து வந்த சசிகலா கடந்த 27-ந்தேதி முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு இருந்ததால், தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் 12 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்தார்.அவரை சசிகலாவின் சகோதரர் திவாகரன், அ.ம.மு.க. பொதுச்செயலா ளர் டி.டி.வி. தினகரன், இளவரசி மகன் விவேக், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் அழைத்து சென்றனர்.அவர் கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டு இருந்தது.ஏற்கனவே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த சசிகலா பின்னர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டு இருந்தார்.இதைத்தொடர்ந்து தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். அதற்கென தனி கொடியும் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று சசிகலா காரில் அ.ம.மு.க. கொடிக்கு பதிலாக, அ.தி.மு.க. கொடி பறந்தது ஆச்சரியத்தை அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *