மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? தமிழக அரசிடம் மத்திய அரசு கேள்வி

தமிழக திரையரங்குகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நடிகர் விஜயின் வேண்டுகோளை ஏற்று நேற்று முன்தினம் தமிழக அரசு 100 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு சிலர் கடும் எதிர்ப்பும் சிலர் ஆதரவும் தெரிவித்தனர்.இந்த நிலையில் தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? எனவும் மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *