அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என மக்கள் நீதி மைய தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாகி விட்டது. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.நீதி மன்றம் பேரறிவாளன் விடுதலை குறித்து கவர்னருக்கு 1 வார கால அவகாசம் கொடுத்திருக்கும் நிலையில் கமல் இப்படி பதிவிட்டுள்ளார்.
பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 22, 2021