புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி 20-க்கும் மேற்பட்டோர் காயம்

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள பில்லியர்ட்ஸ் கிளப்பிற்கு வெளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தில் பில்லியர்ட்ஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த கிளப்பிற்கு வெளியில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் மூன்று பேர் காரில் வந்தனர். அவர்கள் காரில் இருந்து கீழே இறங்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *