பிரித்தானியாவில் 2ஆவது தடுப்பூசிக்கு பிரித்தானியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வேகமாக பரவும் சூழலில்
பிரித்தானியா அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இதற்கிடையே, கொரோனா வைரசின் முந்தைய நிலையை விட உருமாற்றம் பெற்ற புதிய வகை வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரித்தானியா அரசு ஒப்பதல் அளித்துள்ளது.

எனவே, அடுத்தவாரம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டின் துவக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கலாம் என்று அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *