பிரித்தானியாவில் ஜூலை 31 க்குள் அனைவருக்கும் தடுப்பூசி

பிரித்தானியாவில் பெரியவா்கள் அனைவருக்கும் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அந்த நாடு தனது தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தவிருக்கிறது.அத்துடன், ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 வயதுக்கும் மேற்பட்டவா்கள் மட்டும் கொரோனா மரண அபாயத்தை ஏற்படுத்தும் உடல் நலக்குறைவுடையவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த புதிய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னா் இந்த இலக்கு மே 1 ஆம் தேதியாக இருந்தது.பிரித்தானியாவில் ஃபைஸா், அஸ்ட்ராஸெனெகா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்கு அதே தடுப்பூசிகளை அனுப்புவதில் பற்றாக்குறை நிலவுவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.இந்தச் சூழலில், பிரிட்டன் தனது தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி புதிய இலக்குகளை நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *