கொரோனாவால் இறந்து போன உறவினர்களை அடக்கம் செய்ய 5 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய மக்கள் கூறுகின்றனர் . கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் அளவுக்கு தயாராக முடியவில்லை என்றும் கூறி பிரித்தானிய மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இறுதி சடங்கு மையம் நடத்தி வருபவர்களும் உடல்களை வைக்க இடமில்லாமல் போகும் நிலை ஏற்பட்டதாக கூறிவருகின்றனர்.பிரித்தானியாவில் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிற சில இடங்களில் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்வதற்கு மக்கள் 5 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக அவலமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலை பதப்படுத்தும் வேலையை செய்பவர்கள் கொரோனாவால் இருந்தவர்களின் உடல்களை கையாள வேண்டிய சூழ்நிலையால், தங்களுக்கும் நோய்தொற்று ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்துடன் வேலை செய்வதாகவும் மேலும் இறுதிச் சடங்கை நடத்துபவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் கூறி வருகின்றனர்.கடந்த ஆண்டில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 90,000 இறுதிச் சடங்குகளை அவர்கள் நடத்தியதாக மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .