பிரித்தானியப் பிரதமர் மீது அந்நாட்டு மீனவர் அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

பிரெக்சிட் உடன்படிக்கையால் பிரித்தானியாவின் மீன்பிடி உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரெக்சிட் உடன்படிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான மீன்வளக் கொள்கையில் இருந்து டிசம்பர் 31ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுகிறது.

வெளியேற்றத்துக்குப் பின் பிரித்தானியா கடற்பரப்பிலுள்ள மீன்பிடி உரிமைகள் குறித்த புதிய உடன்பாட்டில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த உடன்பாட்டின் படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மீன்பிடி படகுகள் பிரித்தானியா கடற்பரப்பில் மீன்பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பிரித்தானிய கடல் வளங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பிரதமர் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *