பிரான்ஸில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மகள்

பிரான்ஸின் புறநகர் பகுதியான சான்-உவான் லுமூன் பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த  52 வயதான தாய் மற்றும் 21 வயதான மகளுமே சடலங்களாக மீட்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த குடும்பத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக அங்கு வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.எனினும் இந்த கொடூர கொலை சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *