பிரபல இயக்குனரின் அறிவுரையை ஏற்க மறுத்து விட்டேன் வருத்தப்படும் இளம் இயக்குனர்

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கார்த்திக் நரேன். அதனைத் தொடர்ந்து மாபியா என்ற படத்தை இயக்கினார்.இந்த படத்தை எதனால் எடுத்தேன், என்ன சூழ்நிலை எடுத்தேன் என்பதை பகிர்ந்து கொண்டார். அப்போது, துருவங்கள் பதினாறு வெற்றி பெற்றவுடன் எடுக்கப்பட்ட நரகாசுரன் படம் ரிலீஸ் தள்ளிக்கொண்டே சென்றதால் எப்படியாவது ஒரு படம் கொடுத்துவிட வேண்டும் என அவசர அவசரமாக மாபியா திரைப்படம் எடுத்தேன்.

அந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்னால்தான் வெற்றிமாறன் ஒரு அறிவுரையை கொடுத்திருந்தார். படம் எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடக் கூடாது, ஒரு படம் லேட்டானாலும் தரமான படமாக கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் அதை நான் பின்பற்றவில்லை எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார் கார்த்திக் நரேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *