பாகிஸ்தானில் நடந்த பஸ் விபத்தில் 15 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் பஞ்ச்குர் என்ற இடத்தில் இருந்து சிந்து மாகாணத்தின் கராச்சிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து குவெட்டா- கராச்சி நெடுஞ்சாலையில் உதால் என்ற இடத்தில் வரும்போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள், 7 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உதால் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *