பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்த முஸ்லிம் அமைப்பின் தலைவர் உட்பட 30 பேர் கைது!

பாகிஸ்தானின் கராக் என்ற பகுதியில் இந்துமத துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியும், கோவில் ஒன்றும் உள்ளது. இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் அந்த கோவிலில் விரிவாக்கப்பணிகள் சமீபத்தில் நடந்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் முஸ்லிம் மதகுருக்கள் தலைமையில் 350-க்கும் மேற்பட்டோர் அந்த கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பகுதியை இடித்து தள்ளி சூறையாடினர்.

மேலும் கோவிலுக்கு அவர்கள் தீயும் வைத்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பலர், ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சி என்ற பயங்கரவாத கட்சியை சேர்ந்தவர்கள்.

இச்சம்பவம் அங்கிருக்கும் இந்துக்கள்
மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதில் நேற்று 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரெஹ்மத் சலாம் கட்டாக் என்பவரும் அடங்குவார். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *