பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் உள்பட 11 பேர் பலி

ரஷியாவின் கசாமில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக அங்குள்ள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நேரத்தில் பயந்த நிலையில் இரண்டு குழந்தைகள் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 19 வயது வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *