பயணிகள் பேருந்து கவிழ்ந்து – 15 பேர் உயிரிழப்பு

துருக்கியின் பாலிகேசிர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து முழுமையாக சேதமடைந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பாலிகேசிர் மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.முன்னதாக நேற்று மணிசாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *