
டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒன்பது நாட்களிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைமறைவாகியுள்ள அமெரிக்க குற்றவாளிகள் மற்றும் கொலம்பிய கிளர்ச்சிக்காரர்களிற்கு அடைக்கலமளித்ததன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்திற்கு கியுபா தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது என்பதனால் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.கியுபா வெனிசூலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரவிற்கு ஆதரவளித்ததன் காரணமாக அவரால் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இதன் மூலம் வெனிசூலாவிற்குள் சர்வதேச பயங்கரவாதிகள் வளர முடிகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.எமது இந்த நடவடிக்கை மூலம் நாங்கள் கஸ்டிரோ அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதையும் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என்ற தெளிவான செய்தியையும் தெரிவிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஒபாமா அரசு கியுபாவுடன் ஏற்படுத்திய நல்லுறவை முறித்துக்கொள்வதுடன் பைடனன் அரசின் கியுபா மீதான நல்லுறவு முயற்சிகளை கடினமானதாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.2015 இல் கியுபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஒபாமா நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.