பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திய ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே அடித்தது.

மயங்க் அகர்வால் (0), கேஎல் ராகுல் (5), கிறிஸ் கெய்ல் (10), நிக்கோலஸ் பூரன் (0), தீபக் ஹூடா (10) ஆகியோர் தீபக் சாஹர் ஓவரில் வீழ்ந்தனர். இதனால் பங்சாப் அணி 6.2 ஓவரில் 26 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
தீபக் சாஹர் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெடுகள் சாய்த்து, பஞ்சாப் அணியின் பேட்டிங்கை சீர்குலைத்தார். அதில் இருந்து பஞ்சாப் அணியால் மீண்டு வரமுடியவில்லை. ஷாருக் கான் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 106 ரன்களே எடுத்தது.

பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சிஎஸ்கே களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் தொடக்கத்தில் மெதுவாக விளையாடினர்.
ருத்துராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன் வேகமாக உயர்ந்தது.சிஎஸ்கே-யின் ஸ்கோர் 12.3 ஓவரில் 90 ரன்னாக இருக்கும்போது மொயீன் அலி 31 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 8 ரன்னிலும், அம்பதி ராயுடு ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *