நோர்வே நாட்டில் திடீர் நிலச்சரிவு 20 பேரை காணவில்லை பலர் காயம் !

தென்கிழக்கு நோர்வேயில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்க் பகுதியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனால், வீடுகளில் இருந்த பலரும் மண்ணுக்குள் புதைந்து மாயமாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் நிலச்சரினால் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுப்ட்டனர்.

மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த 700 பேரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

நிலச்சரிவால் சிறு காயங்களுடன் வீடுகளில் சிக்கிக்கொண்டவர்களில் 10 பேரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர். ஆனால், இன்னும் 20 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால், மாயமானவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் நேரில் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *