சரத்குமார் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் ’சூரியன்’. கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சரத்குமார், ரோஜா நடிப்பில், பவித்ரன் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் சரத்குமாருக்கு வாய்ப்புகள் குவிந்தது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் சரத்குமார் ’சூரியன்’ படத்தின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோனை விமான நிலையத்தில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கூறியிருப்பதாவது: என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த மிகப்பெரிய வெற்றிப்படம் ’சூரியன்’ திரைப்பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அவர்களை சந்திக்க நேரிட்டது. வாழ்க்கை பயணத்தை பற்றி இருவரும் பேசிக் கொண்டோம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.