நியூசிலாந்து-பாகிஸ்தான் எதிரான 2-வது டெஸ்டில் வில்லியம்சன் மீண்டும் சதம்

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 297 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அசார் அலி 93 ரன்னும், கேப்டன் ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்தனர்.
இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது. 71 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து அந்த அணி திணறியது.பின் 4-வது விக்கெட்டான கேப்டன் வில்லியம்சன்-நிக்கோலஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் அந்த அணியின் ரன் மளமளவென உயர்ந்தது.

வில்லியம்சன் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 140 பந்துகளில் 15 பவுண்டரியுடன், அவர் 100 ரன்னை தொட்டார். முதல் டெஸ்டிலும் வில்லியம்சன் சதம் அடித்ததது குறிப்பிடத்தக்கது .83-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 24-வது சதமாகும்.

இதேபோல மறுமுனையில் இருந்த நிக்கோலஸ் அரை சதத்தைத் தொட்டார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *