
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இடிக்கப்பட்டது அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என யாழ்பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்தவேளை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார் என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்களை சந்திப்பதற்கு முன்னர் துணைவேந்தரை தான் சந்தித்ததாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுத்தூபியை இடிப்பதற்கு எனக்கு அழுத்தம் தந்தார்கள்,ஆனால் தற்போது தாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர் என துணைவேந்தர் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன அதனை பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.தூபியை இடித்தது எனக்கும் கவலைதான் அதனை மீள உருவாக்க தயாராயிருக்கின்றேன் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.