நாளை தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸில் சாதிப்பாரா ஜோகோவிச்

உலகின் மிகவும் பழமையான கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் போட்டி கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டுக்கான 3-வது கிராண்ட்சிலாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நாளை தொடங்குகிறது. ஜூலை 11-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.முன்னணி வீரர்களான ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். வீராங்கனைகளில் நடப்பு சாம்பியனான ஷிமோனா ஹலேப் காயம் காரணமாக ஆடவில்லை.

நடப்பு சாம்பியனான ஜோகோவிச் (செக் குடியரசு) இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் பட்டங்களை கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக அவர் 19 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றுள்ளார்.ஜோகோவிச் 20-வது பட்டம் வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படு கிறது. இருவரும் அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவர்களில் முதல் இடத்தில் உள்ளனர்.

கிராண்ட் சிலாம் வென்றதில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் தற்போது உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். விம்பிள்டன் போட்டியும் அவருக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.பெடரர், சிட்சிபாஸ், மெட்வதேவ் ஆகியோர் ஜோகோவிச்சுக்கு சவால் கொடுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்லிபார்டி, சபலென்கோ, சோபியா கெனின் ஆகியோர் பட்டம் பெறுவதற்கு கடுமையாக போராடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *