தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஏழை மாணவியின் மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டது , நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டது
நடிகர் தவசியின் மருத்துவ செலவிற்கு உதவி செய்தது என பல உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .