நடிகை நதியாவுக்கு கொரோனா! இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் தொற்றால் பாதிப்பு

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் நடிகை நதியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிகை நதியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை நதியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் நடிகை நதியா இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளார்.மேலும் நதியாவின் அப்பா, அம்மா வீட்டில் வேலை செய்பவர் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனை அடுத்து நதியா உட்பட 4 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். நடிகை நதியா விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *