கடந்த டிசம்பர் 9 ம் தேதி தமிழக மக்களை அதிர்ச்சியாக்கும் வகையில் வந்த செய்தி சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை.
தற்கொலைக்கு முந்தைய நாள் வரை சந்தோஷமாக இருந்த அவர் திடீரென தற்கொலை செய்தது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி தான்.
அதிலும் சித்ரா மிகவும் தைரியமான பெண் அவர் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது நண்பர்கள் மற்றும் அவரது தாய் அன்றிலிருந்தே கூறி வருகின்றனர் .
பின்னர் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ கடந்த 14 ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரர், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஹேம்நாத்திடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார்.
பின்னர் சித்ராவிற்கு நெருக்கமான 15 பேரிடம் விசாரனை நடத்தி அதனை 16 பக்கங்களாக அறிக்கையை தயாரித்தார் .
பின்னர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார்.
விசாரணை அறிக்கையில் சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.