தமிழக நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினார்

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். ரூ.30 லட்சத்தை அவர் ஆன்லைன் மூலமாக அனுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *