நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ நிர்வாகம், “கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை.
ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” முதற்கட்டமாக அறிக்கை வெளியிட்டது.
இன்று மாலை 6 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட பல்வேறு பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை.
இன்னும் பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்’’ எனத்தெரிக்கப்பட்டுள்ளது.