துபாயில் 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க திருச்சபையை திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகிறது

துபாயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க திருச்சபையை தற்போது சுகாதார முன்னெச்சரிக்கைகளுடன் மீண்டும் திறக்க சமூக மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் தேவாலயம் மீண்டும் பொதுமக்கள் பிரார்த்தனைக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கூட்டு பிரார்த்தனைகள் நடத்த வழிகாட்டும் நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் முதல் தினசரி காலை 6.30 மணி மற்றும் 7 மணி ஆகிய 2 நேரங்களில் மட்டும் கூட்டு பிரார்த்தனை நடைபெறும். மற்ற நேரங்களில் தேவாலயம் மூடப்பட்டு இருக்கும். இந்த கூட்டுப்பிரார்த்தனையில் கலந்துகொள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என தேவாலய திருச்சபையின் பேராயர் அருட்தந்தை லென்னி கன்னுலி தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *