தமிழக மீனவர்களின் சடலங்களை இன்றிரவு ஒப்படைக்க ஏற்பாடு

நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.50க்கும் மேற்பட்ட இந்திய ரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த படகுகளை கைப்பற்ற முயன்றவேளை அதிலிருந்து தப்பமுயன்ற படகொன்று இலங்கை கடற்படையின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட படகில் எத்தனை மீனவர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .இந்த சம்பவம் காரணமாக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கலமொன்று சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு அறிவித்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.கடலில் மூழ்கிய இந்திய படகினை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.இதில் படகு உடைந்து மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களில் 4 மீனவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.இந்தநிலையில் 4 பேரின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று அடித்து கொலை செய்து கடலில் வீசி விட்டதாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.இந்தநிலையில் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள், அங்குள்ள இலங்கை தூதரை அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தனர். அவரிடம் இந்த சம்பவத்தை இந்தியா கடுமையாக கண்டிப்பதாக கூறினார்கள். மேலும் மத்திய அரசு சார்பில் கண்டன கடிதமும் அவரிடம் வழங்கப்பட்டது.அதில், இலங்கை அரசு இது போன்ற அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டது தவறானது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

நெடுந்தீவுக் கடலில் உயிர் நீத்த நான்கு இந்திய மீனவர்களினது சடலங்களும் இரவு 8 மணியளவில் காங்கேசன்துறை ஊடாக தமிழகம் எடுத்துச் செல்லப்படவுள்ளன. உயிரிழந்த 4 மீனவர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் நீதிமன்ற அனுமதியுடன் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு இன்று இரவு 8 மணியளவில் காங்கேசன்துறை எடுத்துச்செல்லப்பட்டு இலங்கைக் கடற்
படையினரிடம்கையளிக்கப்படவுள்ளன.இலங்கை கடற்படையினர் அவற்றை எடுத்துச் சென்று இன்று நள்ளிரவு வேளையில் நடுக்கடலில் வைத்து இந்திய கரையோரக் காவல் படையினரிடம் கையளிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *