தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும்-ஸ்டாலின்

இன்றுஅண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர், தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது.தமிழகத்தில் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர்.கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது. தேர்தல் நெருங்குவதால் பொய்யான விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 19-வது இடத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.வருகிற பொது தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்முறை அ.தி.மு.க. எதிர்கட்சியாகக் கூட வர முடியாது என ஸ்டாலின் பேசினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *