பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.பாக்கிஸ்தான் அணியின் சார்பில் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 104 ரன்கள் எடுத்தார்
பின்னர் 170 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான மாலன், ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாலன் 44 ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 53 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியால் 15 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.